Wednesday, March 3, 2010

பஸ்ஸா காரா?

பஸ்ஸா காரா?
பஸ் நல்லதா கெட்டதா?
சமீப காலமா இது பெரிய சர்ச்சை ஆகிகொண்டிருக்கு! சமீப காலம்??? ஓ, பஸ் வந்தே ஒரு வாரம்தான் ஆகிறது. இது சமீப காலம்ன்னு தோணுவதற்கு அவ்வளோ சீக்கிரம் வளர்ந்துவிட்டது.

திடீர்ன்னு ஒரு நாள் ஜிமெய்ல் திறக்கும்போது பஸ் ன்னு புதுசா வந்திருக்கு. செயலாக்கலாமா ன்னு செய்தி வந்தது. அதிலே நிச்சயமா learn more ஆப்ஷன் இருந்தது. அப்புறமா என்னோட இன்னொரு மெய்ல் ஐ திறக்கிறப்ப வேண்டாம்ன்னும் சொன்னேன்; அது செயலாகலை. ஏன் இதை சொல்கிறேன்னா சிலர் கூகுள் தனக்கு ஒரு தேர்வை தரலைன்னு எழுதுகிறதுதான்.

பல வருஷங்களுக்கு முன்பே கூகுள் கருவிப்பட்டையை (டூல் பாரை) நிறுவம் போது வழக்கம் போல நிறுவலாமான்னு அனுமதி கேக்கறப்ப இது வழக்கமான "யாடா யாடா" இல்லை; கவனமா படிச்சுட்டு நிறுவுங்கன்னு சொன்னது. உள்ளே தானியங்கியா எதை மக்கள் தேடுறாங்கன்னு விவரம் சேமிக்கப்படும். ஆனா உங்க பெர்சனல் தகவல் ஏதும் சேகரிக்கப்படாது ன்னு தெளிவாகவே சொல்லியது. இப்படி அப்பட்டமா தன்னைப்பத்தி சொல்லிக்கொண்டது முதல் கூகுளை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

பஸ் ஐ திறந்தப்ப உன் அஞ்சல் பட்டியல்லே இருக்கிற இன்னின்னார் பஸ்லே ஏற்கெனெவே இருக்காங்க. அவங்களை தொடரலாமான்னு கேட்டுது. இருந்த 2-3 பேரை சரின்னு தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் நேரம் கொடுத்து இதைப்பத்தி ஆராய்ஞ்சப்ப இது என்ன விஷயம்ன்னு புரிஞ்சது.
பிரைவேட்டா அரட்டை அடிக்கத்தான் gசாட், gடாக் எல்லாமிருக்கே? அப்ப இது எங்கே ஃபிட் ஆகும்ன்னு பாத்தப்ப பொதுவான செய்திகளை சும்மா ஒரு போர்டிலே எழுதி வைக்கிற மாதிரி இதுன்னு புரிஞ்சு போச்சு. அதிலே யார் படிப்பாங்க மாட்டாங்கன்னு கவலை இல்லை, இல்லையா?
சிலர் நான் எழுதறது மத்தவங்க படிச்சுடறாங்களேன்னு புகார் பண்ணறது தமாஷா இருக்கு! அப்படி படிக்கத்தானே எழுதறோம்? ஏம்பா நீ மத்தவங்க எழுதறதை படிக்க முடியும் என்கிறப்ப அவங்களும் உன்னுதை படிக்க முடியும்ன்னு புரியலையா? தனியா யாருக்கும் ஏதும் சொல்லனும்ன்னா gமெய்ல் இருக்கு, சாட் இருக்கு, இருநூத்து இருபத்தெட்டரை வழி இருக்கு....
பஸ்லே போட்டுட்டு புகார் பண்ணுவானேன்?

ஆக மொத்தம் பஸ்ஸை கொஞ்சம் நிதானமா ஆராய்ஞ்சு பாத்தவங்க அது எதுக்கு பயன்படுமோ அது தேவையானா பயன்படுத்தலாம். நான் என்ன வாங்கினாலும் அதோட ஒரு பேப்பர் இருந்தா சும்மா அதை முழுக்க படிச்சுடுவேன். ஏதாவது எலக்ட்ரானிக் பொருள் வாங்கினா கையேட்டை (மேனுவலை) படிச்சுடுவேன். எதையும் பயன்படுத்தும் முன்னே அது எனக்கு புரியனும். புரியலைன்னா பயன்படுத்த மாட்டேன்.
ஆனா இப்படி இருந்தாதான் பஸ்ஸோட நுணுக்கம் புரியும்ன்னு இல்லையே! கொஞ்சம் நிதானத்தோட அணுகி இருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை.
இப்ப பாத்தா நிறைய எதிர்வினை இருக்கு. எல்லாரும் நான் போறேன் ன்னு குதிக்கறாங்க. எதுக்கு? பயம்தான். இது என்னன்னு சரியா புரியாத பயம்.
சில விஷயங்களை புரிஞ்சுண்டு அப்புறம் செய்கிறதை செய்யுங்க.
பஸ் ஓபன் போர்ட். எழுதறதை யாரும் பாக்கலாம். பொன் மொழிகள் எல்லோருக்கும் சொல்லக்கூடிய செய்திகள், விவரங்கள் எல்லாம் இதிலே வரலாம். நான் வீட்டுக்கு இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டேன் ன்னு கூட ஒத்தர் செய்தி போட்டார்!
பஸ்லே கொஞ்சம் தனிமை வேணும்ன்னா அதுக்கும் வசதி இருக்கு. நாம் சில நபர்களுக்கு மட்டுமே சில விஷயங்களை சொல்ல விரும்பறோம். அந்த சிலர் ஒத்தருக்கு ஒத்தர் நல்லா தெரிஞ்சவங்க. க்லூ க்லக்ஸ் க்லான் மாதிரின்னு வெச்சுக்குங்களேன்! முதல்லே ஒரு குழுவை gமெய்ல்லே உருவாக்குங்க. இஷ்டமான பேரை - என் முக்கிய எதிரிகள் மாதிரி- என்ன வேணா கொடுங்க. உருவாக்கிய பிறகு பஸ்ஸுக்கு வாங்க. ஒரு செய்தியை தட்டுங்க. கீழே பப்ளிஷ் டு வெப் ன்னு இருக்கும். பக்கத்திலே இருக்கிற அம்பு குறி மேலே சொடுக்கினா இன்னும் தேர்வு தெரியும். பிரைவேட் ன்னு இன்னும் ஒரு தேர்வு. இதை சொடுக்கினா உங்க மெய்ல் கணக்கிலே இருக்கிற குழுக்கள் பேர் தெரியும். (இதை எழுதறப்ப பாத்தா புதுசா குழு உருவாக்கற வசதிக்கு லிங்க் இந்த இடத்தில் பஸ்லேயே இருக்கு.) குழுவை தேர்ந்தெடுத்து சொடுக்கினா வேலை முடிஞ்சது. அந்த குழுவிலே இருக்கிறவங்களுக்கு மட்டுமே இந்த செய்தி தெரியும்.

சுருக்கமா சொன்னா பஸ் பப்ளிக் காரியர். யார் வேணுமானா ஏறுவாங்க இறங்குவாங்க. கார் பிரைவேட். நாம் அனுமதிச்சாத்தான் யாரும் ஏறமுடியும்.

வாழ்க்கையிலே ஏதானாலும் கொஞ்சம் நிதானம் தேவை. அப்பதான் கண்ட படி மாட்டிக்காம இருப்போம். ம்ம்ம்ம்ம் கல்யாணம் ஆகு முன்னே இதை சொல்லக்கூடாதா என்கிறீங்க? விதி வலியது! :-))

16 comments:

Ashwin Ji said...

ஆமாம். திவாஜி. பஸ்ஸப் பத்தி தேவையில்லாம நிறைய பேரு பயப்படறாமாதிரி தோணுது. ஒருத்தர் நான் பின் தொடருதல் எல்லாத்தையும் அணைச்சுட்டேன்னு என் பஸ்ல எழுதியிருந்தார். நம்ம மக்களுக்கு எதைப் பாத்தாலும் எக்சைட்மென்ட். ஒருத்தர் எத செஞ்சாலும் புரிஞ்சுக்காம நாமும் பண்ணனும். அவர் விட்டுட்டார்னா நாமும் விட்டுடணும். பஸ்ல நீங்க சொன்னத பாத்துட்டு இந்த பதிவுக்கு வந்தேன்.
நன்றி.

திவாண்ணா said...

அப்பா! ஒத்தராவது நிதானமா இருக்கீங்களே!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் தேவையில்லாத, அறிமுகமற்ற பெயர்களை நீக்கினாலே போதுமே. மத்தபடி இந்த பஸ் கொஞ்சம் கூட்டமா இருந்தாலும், (பழக்கம் தானே கூட்டத்துக்கும்?:D) பிடிச்சுத் தான் இருக்கு. நாம எழுதறதிலேயும் கவனம் கூடுமே. நிதானப் படுத்திக்கவும் முடியும். இல்லத்திலே பார்த்தேன் இந்தப் பதிவை, யூனியனிலேயே கமெண்டலாம்னு வந்தேன். நன்றி.

திவாண்ணா said...

ரெண்டு...

திவாண்ணா said...

ஏன் ப்ளாக் யூனியன் ஆக்ஸிஜன்லே இருக்கு? யாரும் கவனிக்கறதில்லையா?

ambi said...

பஸ்ல இன்னொரு முக்ய விஷயம்:

தானாகவே கூகிள் சேவைகளான பிகாசா, ரீடர், ஜிடாக் ஸ்டேடஸ் மெசேஜ்னு ஏதாவதை நம்ம அனுமதி இல்லாமலேயே லிங்க் பணீடுது ஆரம்பத்துல.

இப்படி தான் நேத்து என் தோழி ஒருத்தியின் பிகாசா போட்டோக்களை லிங்கி விட்டது. அப்புறம் நான் அவளுக்கு சொல்ல, அலறி அடித்து கொண்டு கட் செய்தாள்.

என்ன செய்ய, இப்பல்லாம் கதவை திறந்தா காத்து வரும்னு பாத்தா புயல் இல்ல வந்து சேருது. :))

ambi said...

//ஏன் ப்ளாக் யூனியன் ஆக்ஸிஜன்லே இருக்கு?//

எல்லாருமே பிசின்னும் சொல்ல முடியாது. ஏன்னு எனக்கும் தெரியலை. ஆரம்பிச்ச பாவத்துக்கு நான் மட்டும் கல்யாணம், காது குத்து, சதாபிஷேகம்னு(கீதா பாட்டி உங்களுக்கு தான்) பதிவு போட்டுண்டு இருக்கேன். :))

கிளிக்கு றெக்கை முளச்சுடுத்து போல. :))

محمدرضا مهرپویا said...

www.dan-lod.blogfa.com

www.lost1796.blogfa.com

ambi said...

திவாண்ணா பதிவு போட்டா ஈரான்ல இருந்து எல்லாம் ஆட்கள் வராங்க பா. :))

சலாம் அலே கும் முகம்மது பாய். :))

திவாண்ணா said...

அம்பி றெக்கை முளைச்ச கிளி ஈரான் போயிருக்கணும்! :-))

Geetha Sambasivam said...

அம்பியாலே உருப்படியா ஒரு காரியம் ஆயிருக்கே! அந்த வரைக்கும் சந்தோஷம் :P:P:P:P

Geetha Sambasivam said...

காது குத்து, சதாபிஷேகம்னு(கீதா பாட்டி உங்களுக்கு தான்) பதிவு போட்டுண்டு இருக்கேன். :))//

க்ர்ர்ர்ர்ர்ர்ர் கிளி ரெக்கை முளைச்சு எங்கே வேணாலும் போகுதே, அம்பி, பார்த்து, ஜாக்கிரதை! :P:P:P

Geetha Sambasivam said...

@திவா,
இப்போத்தான் ஒண்ணு, ரெண்டு ஆரம்பிச்சிருக்கீங்க போல! :P:P:P

சி.பி.செந்தில்குமார் said...

சுருக்கமா சொன்னா பஸ் பப்ளிக் காரியர். யார் வேணுமானா ஏறுவாங்க இறங்குவாங்க. கார் பிரைவேட். நாம் அனுமதிச்சாத்தான் யாரும் ஏறமுடியும்.

என்னா ஒரு கண்டுபிடிப்பு.
ஒண்ணு ஒத்துக்கறேன்.
எழுத்து நடை நல்லா வருது

இராஜராஜேஸ்வரி said...

பிடிச்சுத் தான் இருக்கு. நாம எழுதறதிலேயும் கவனம் கூடுமே. நிதானப் படுத்திக்கவும் முடியும்

yathavan64@gmail.com said...


அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (16/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE